Published : 15 Dec 2016 05:21 PM
Last Updated : 15 Dec 2016 05:21 PM

சசிகலாதான் அதிமுக பொதுச் செயலாளர்: கட்சி விதிகள் தளர்த்தப்படும் என்றும் தகவல்- செய்தி தொடர்பாளர் சி.பொன்னையன் திட்டவட்டம்

சசிகலாதான் அதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் என்று கட்சியின் செய்தித் தொடர்பாளர் சி.பொன்னையன் திட்டவட்டமாகத் தெரிவித்தார். அவருக்காக கட்சி யின் விதிகள் தளர்த்தப்படும் என்றும் அவர் கூறினார்.

அனைத்துலக எம்ஜிஆர் மன்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அதன் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் சென்னையில் நேற்று காலை நடந்தது. இதில், சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், அதிமுக செய்தி தொடர்பாளர் சி.பொன்னையன், முன்னாள் அமைச்சர்கள் தளவாய் சுந்தரம், பச்சைமால், கோகுல இந்திரா உட்பட பலர் பங்கேற்றனர்.

ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும், அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்க வலியுறுத்தியும் இக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.பொன் னையன் கூறியதாவது:

எம்ஜிஆரின் மனசாட்சியாக ஜெயலலிதா விளங்கியதுபோல, ஜெயலலிதாவின் மனசாட்சியாக வாழ்ந்து வருபவர் சசிகலா. ஜெய லலிதாவின் நிழலாக 33 ஆண்டுகள் சசிகலா இருந்தார். ஜெயலலிதா உச்சநிலைக்கு வர அச்சாணியாக, அவருடன் தோளோடு தோளாக நின்று செயல்பட்டார். அதிமுகவுக்கு தலைமை ஏற்கவும், பொதுச் செயலாளராக வருவதற்கும் முழுமையான தகுதி படைத்தவர் அவர்தான். அதனால்தான் அவரை வலியுறுத்தி வருகிறோம்.

கட்சியில் சசிகலாவுக்கு தற் போது பெரும் ஆதரவு உள்ளது. அவரே பொதுச் செயலாளர் ஆக வேண்டும் என்று கட்சியில் உள்ள அமைப்புகள் அனைத்தும் வலி யுறுத்தி வருகின்றன. சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்வு செய்வதற்கு ஏதுவாக கட்சியின் விதிகள் தளர்த்தப்படும். இது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்பட்டு பொதுக்குழுவில் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விதிகள் தளர்வு

அதிமுகவில் எம்ஜிஆர் உரு வாக்கிய விதிகளின்படி, 5 ஆண்டு கள் தொடர்ந்து உறுப்பினராக இருந் தவர் மட்டுமே பொதுச் செயலாளர் பதவிக்கு வரமுடியும். சசிகலா கடந்த 2012-ல் நீக்கப்பட்டு மீண்டும் சேர்க் கப்பட்டதால், அவருக்காக விதிகள் தளர்த்தப்பட்டு, பொதுக்குழுவில் அறிவிக்கப்படும் என அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x