Published : 28 Jan 2023 04:16 AM
Last Updated : 28 Jan 2023 04:16 AM

எழுத்தாளர் கல்கியின் நினைவு நாளை முன்னிட்டு 'கல்கி தீபாவளி மலர்க் கதைகள்' நூல் வெளியீடு

சென்னை: எழுத்தாளர் கல்கியின் நினைவு நாள் நிகழ்ச்சி சென்னை மைலாப்பூர் ராகசுதா ஹாலில் வியாழக்கிழமை நடந்தது. கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் கல்கி, ஆனந்த விகடன் மற்றும் கல்கி தீபாவளி மலர்களில் எழுதிய கதைகளின் தொகுப்பு, புத்தகமாக வெளியிடப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வெளியிட்டு, கல்கியின் சாதனைகளை நினைவு கூர்ந்தார். புத்தகத்தின் முதல் பிரதியை ஹரிகதை கலைஞர் சிந்துஜா பெற்றுக் கொண்டார். தொடர்ந்து, சிந்துஜா, ‘நந்தனார் சரித்திரம்’ ஹரிகதையை வழங்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x