Published : 28 Dec 2016 09:04 AM
Last Updated : 28 Dec 2016 09:04 AM
பொதுத்துறை வங்கிகளுக்கு தேவை யான பணத்தை ரிசர்வ் வங்கி வழங்க வேண்டும் என வலியுறுத்தி பொதுத்துறை பாதுகாப்பு அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொதுத்துறை பாதுகாப்பு அமைப்பு சார்பில் நேற்று சென்னையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதில், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத் தலைவர் தே.தாமஸ் பிராங்கோ ராஜேந்திர தேவ், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் தமிழ்நாடு பிரிவின் பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ் ணன், மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் பொதுச்செயலா ளர் எம்.துரைப்பாண்டி, அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் செந்தில்குமார், இணைச் செய லாளர் சிவசுப்பிரமணியம் உள் ளிட்டோர் பங்கேற்று பேசினர். அப்போது, அவர்கள் கூறியதாவது:
பணமதிப்பு நீக்க அறிவிப்பை வெளியிட்ட பிறகு மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி இதுவரை 60-க்கும் மேற்பட்ட அறிவிப்புகளை வெளியிட்டது. இதன் மூலம், பண மதிப்பு நீக்க நடவடிக்கையை மத்திய அரசு சரிவர திட்டமிடாதது தெரியவருகிறது.
ரிசர்வ் வங்கி பொதுத்துறை வங்கிகளுக்கு மிகக் குறைந்த அளவு பணம் வழங்குவதால் பொதுமக் களுக்கு சரிவர வழங்க இயல வில்லை. ஆனால், தனியார் துறை வங்கி வாடிக்கையாளர்களுக்கு தேவையான அளவு பணம் வழங்குவதோடு அந்த வங்கிகளின் ஏடிஎம்களும் தொடர்ந்து இயங்கும் அளவுக்கு தாராளமாக பணம் வழங்கப்படுகிறது. இதன் மூலம், அரசு தனியார் துறையை ஊக்கு விக்கிறது.
கடந்த 50 நாட்களில் வங்கித் துறை, உற்பத்தித்துறை, வணிகத் துறை மற்றும் சேவைத்துறை உள்ளிட்ட எல்லா துறைகளும் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளது. கோடிக் கணக்கான முறைசாரா தொழிலாளர்கள் தங்கள் வேலை மற்றும் வாழ்வாதாரத்தை இழந் துள்ளனர். நாட்டின் பொருளா தாரம் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது.
எனவே பொதுமக்களுக்கு பணம் வழங்கப்படுவதற்கு விதிக் கப்பட்டுள்ள கட்டுப்பாடு களை நீக்க வேண்டும். புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை நாட்களில் மக்கள் பாதிக்காத வண்ணம் பொதுத்துறை வங்கிகளுக்கு தேவையான பணத்தை ரிசர்வ் வங்கி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT