குடியாசு தின விழா கொண்டாட்டம்: மெரினாவில் தலைவர்களின் நினைவிடங்களை பார்வையிட தடை

குடியாசு தின விழா கொண்டாட்டம்: மெரினாவில் தலைவர்களின் நினைவிடங்களை பார்வையிட தடை
Updated on
1 min read

சென்னை: குடியாசு தின விழா கொண்டாட்டம் காரணமாக மெரினாவில் உள்ள தலைவர்களின் நினைவிடங்களை பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: குடியாசு தின விழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ம் நாள் சென்னை, மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் நடைபெறுவது வழக்கமாகும். தற்போது அந்த இடத்தில் இரண்டாம் கட்ட மெட்ரோ இரயில் பணிகள் நடைபெற்று வருவதால், இந்தாண்டு தமிழ்நாடு ஆளுநர் மற்றும் தமிழ்நாடு முதல்வர் கலந்துகொள்ளும் குடியரசு தின விழா மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் நடைபெறவுள்ளது.

எனவே, பாதுகாப்பு காரணங்களால் 25.01.2023 முதல் 26.01.2023 முற்பகல் வரை அண்ணா சதுக்கத்தில் அமைந்துள்ள தலைவர்களின் நினைவிடங்களை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in