Published : 28 Dec 2016 10:57 AM
Last Updated : 28 Dec 2016 10:57 AM

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலுக்கு குடமுழுக்கு விழா: 84 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிறது - கங்கையிலிருந்து புனித நீர் எடுத்து வரப்படுகிறது

கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்திருக்கும் சோழீஸ்வரர் கோயிலுக்கு 84 ஆண்டுகளுக்குப் பிறகு, பிப்ரவரி 2-ல் குடமுழுக்கு நடக்கிறது. இதை வரலாற்று நிகழ்வாகவும் பதிவு செய்வதற்காக கங்கையிலிருந்து 108 கலசங்களில் புனித நீர் எடுத்து வந்து குடமுழுக்கு நடத்தப்படுகிறது.

1932-ல் குடமுழுக்கு

வங்கத்தை வெற்றிகொண்ட ராஜேந்திர சோழன் அதைக் கொண் டாடும் விதமாக கங்கையிலிருந்து நீர் எடுத்து வந்து, இங்கே ஜல ஸ்தூபியை நிறுவியதுடன் ‘கங்கை கொண்ட சோழபுரம்’ என்ற நகரத் தையும் உருவாக்கி, சோழ நாட் டின் தலைநகரை அங்கு மாற்றி னான். கங்கைகொண்ட சோழபுரத் தில் சோழீஸ்வரர் (பிரகதீஸ்வரர்) கோயிலும் அவனால் எழுப்பப்பட் டது. இந்தக் கோயிலுக்கு 1932-ல் உடையார்பாளையம் ஜமீன்தாரால் கடைசியாக குடமுழுக்கு நடத்தப் பட்டது. அதற்கு பிறகு குடமுழுக்கு நடைபெறவில்லை.

தொல்லியல்துறை அனுமதி

இந்தக் கோயில் இந்திய தொல்லியல் மற்றும் பரப்பாய்வுத்துறை மற்றும் யுனெஸ்கோவின் கட்டுப் பாட்டில் உள்ளதால் அனுமதி பெறுவதில் நிர்வாகச் சிக்கல்கள் இருந்தன. இதனால், பலமுறை கும்பாபிஷேகம் நடத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு கைவிடப்பட்டது. கடந்த 2011 மற்றும் 2013-ம் ஆண்டு களில் கொடிமரங்கள் எடுத்து வரப்பட்ட நிலையிலும்கூட அனுமதி கிடைக்காததால் குடமுழுக்கு நடத்த முடியாமல் போனது. இந்த நிலையில், காஞ்சிமட அன்னா பிஷேக கமிட்டியின் வேண்டு கோளை ஏற்று, சோழீஸ்வரர் கோயிலுக்கு பிப்ரவரி 2-ம் தேதி குடமுழுக்கு நடத்த தொல்லியல் துறையும் யுனெஸ்கோவும் இந்து அறநிலையத் துறையும் அனுமதி வழங்கி இருக்கின்றன.

இது தொடர்பாக ‘தி இந்து’விடம் பேசிய காஞ்சிமட அன்னாபிஷேக கமிட்டியின் ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் கோமகன், “இந்தக் கோயிலில் கொடிமரம் அமைப்பதற்குக்கூட இதற்கு முன்பு அனுமதி தரப்படவில்லை. இப்போது அதற்கான அனுமதியும் கிடைத்திருக்கிறது. குடமுழுக்குக்கு முன்னதாக, 43 அடி உயரத்தில் தங்க முலாம் பூசிய தாமிரப்பட்டை பொருத்தப் பட்ட கொடி மரம் நடப்படுகிறது. இதேபோல், கோயிலின் கருவறை விமானத்தில் 9 அடி உயர தங்கக் கலசமும் பொருத்தப்படுகிறது. ராஜேந்திரனின் கங்கை வெற்றி யால்தான் கங்கைகொண்ட சோழ புரமும் இந்தக் கோயிலும் உருவா னது. எனவே, இதை ஆன்மிக விழாவாக மாத்திரமில்லாமல் வர லாற்று நிகழ்வாகவும் பதிவுசெய்ய தீர்மானித்திருக்கிறோம்.

108 கலசங்களில் புனித நீர்

இதற்காக, ராஜேந்திரன் படை யெடுத்துச் சென்ற இடங்களைத் தடம் காணும் பயணக் குழுவானது ஜனவரி 6-ம் தேதி ஹரித்துவார் செல்கிறது. அங்கே 108 கலசங்களில் புனித நீர் எடுக்கப்பட்டு, 13-ம் தேதி திருப்பனந்தாள் அருகில் உள்ள திருலோச்சி கிராமத்துக்கு கொண்டு வரப்படுகிறது. ராஜேந்திரன் கங்கையை வெற்றி கொண்டதைச் சொல்லும் முதல் கல்வெட்டு இங் குள்ள சிவாலயத்தில்தான் உள் ளது. அதனாலேயே கங்கை நீர் கலசங்கள் முதலில் இங்கு கொண்டு வரப்படுகின்றன. ஜனவரி 27 மாலை யாகசாலை பூஜைகள் தொடங்கு கின்றன.

அதற்கு முன்னதாக அன்று காலையில் திருலோச்சியிலிருந்து 108 கலசங்களும் பொதுமக்கள் புடைசூழ 18 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு யாக சாலை பூஜையில் குடமுழுக்கு நடத்துவதற்காகச் சேர்க்கப்படும்’’ என்று சொன்னார்.

கோமகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x