குடியரசு தின விழா பாதுகாப்பு: டெல்லி செல்லும் ரயில்களில் ஜன.26 வரை பார்சல் சேவை நிறுத்தம்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

சென்னை: குடியரசு தின விழாவை முன்னிட்டு, பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், டெல்லி செல்லும் அனைத்து ரயில்களிலும் ஜன.23 முதல் 26ம் தேதி வரை பார்சல் சேவையை தற்காலிகமாக நிறுத்த ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் வரும் 26-ம் தேதி குடியரசு தினவிழா கொண்டாடப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து, விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், கோயில்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் தொடர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து டெல்லி செல்லும் அனைத்து ரயில்களிலும் அனைத்து வகையான பார்சல் சேவைகள் ஜன.23 முதல் 26-ம்தேதி வரையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக, இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக, தெற்கு ரயில்வே உள்பட அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் இந்திய ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், செய்தித்தாள்கள், இதழ்கள் செல்ல தடையில்லை என்று தெரிவிக்கக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in