

தென் தமிழகத்தில் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம், ''தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டி தெற்கு இலங்கை பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளது. இதன்காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும். வடதமிழகம் மற்றும் உள்தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும்.
சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்'' என்று தெரிவித்துள்ளது.