கல்வெட்டுகள் பாதுகாப்பு: மத்திய அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்

கல்வெட்டுகள் பாதுகாப்பு: மத்திய அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்
Updated on
1 min read

சென்னை: மைசூருவில் இருந்து சென்னைக்கு மாற்றப்பட்ட 28 ஆயிரம்தமிழ் கல்வெட்டுகளை பாதுகாக்கும் வகையில் சென்னை மண்டலத்தில் வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என மத்திய கலாச்சார அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டிக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மைசூருவில் உள்ள தொல்லியல் துறையின் கல்வெட்டு பிரிவில் பாதுகாக்கப்பட்ட 28 ஆயிரம்தமிழ் கல்வெட்டுகள், 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னைஉயர் நீதிமன்ற உத்தரவின் பேரில்சென்னை மண்டல அலுவலகத்துக்கு மாற்றப்பட்டன. இவற்றைபாதுகாக்கும் வசதி சென்னை மண்டல அலுவலகத்தில் இல்லை. இந்த முக்கியமான கல்வெட்டுகள் வெப்பநிலை மற்றும் பாதகமான வானிலை காரணமாக உடைந்து போகின்றன.

இந்த கல்வெட்டுகள் அனைத்தும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. எனவே, சென்னை மண்டலத்தில் கல்வெட்டுகளை பாதுகாக்க வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in