Published : 05 Dec 2016 01:02 PM
Last Updated : 05 Dec 2016 01:02 PM
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் பூரண நலம் பெற வேண்டும் என பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிஹார் முதல்வர் நிதிஷ் குமார்
"ஜெயலலிதா விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்தை அடைய பிரார்த்திக்கிறேன்"
மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான்
"தமிழக முதல்வர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்"
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு
"முதல்வருக்கு கடவுள் அனைத்து வலிமைகளையும் வழங்குவார்"
நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரியா சுலே
"செல்வி ஜெயலலிதா விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்"
ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா
"நானும் எனது தந்தையும் இணைந்து ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகிறோம்"
மத்திய இணையமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்
"தமிழக முதல்வர் ஜெயலலிதா குணமடைய வாழ்த்துகிறேன். அவர் விரைவில் நல்ல ஆரோக்கியத்தைப் பெறுவார் என்று நம்புகிறேன்"
கேரள ஆளுநர் பி. சதாசிவம்
"தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டுள்ள இதய பாதிப்பு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்"
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
"முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டுள்ள இருதய பாதிப்பு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்"
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT