Published : 14 Dec 2016 06:24 PM
Last Updated : 14 Dec 2016 06:24 PM

சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டப் பள்ளிகள் வியாழக்கிழமை வழக்கம் போல இயங்கும்

சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டப் பள்ளிகள் வியாழக்கிழமை வழக்கம் போல இயங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவித்துள்ளார்.

‘வார்தா’ புயலின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 1 லட்சத்துக்கும் அதிகமான மரங்கள் சாய்ந்தன. மின் கம்பங்கள் சாய்ந்ததால் மின் விநியோகம் தடைபட்டது.

மின்சாரம், பால், குடிநீர் கிடைக்காமல் மக்கள் கடும் அவதிப்பட்டனர். மரங்களை அகற்றுவது உள்ளிட்ட பணிகள் போர்க்கால அடிப்படையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதிகபட்சம் 2 நாட்களுக்குள் அனைத்து சீரமைப்புப் பணிகளும் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டப் பள்ளிகள் வியாழக்கிழமை வழக்கம் போல இயங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x