கோவையிலிருந்து திண்டுக்கல்லுக்கு நாளை முதல் பொங்கல் சிறப்பு ரயில்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

கோவை: தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “கோவை ரயில் நிலையத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு ஜன. 13 (நாளை) முதல் வரும் 18-ம் தேதி வரை பொங்கல் சிறப்பு முன்பதிவில்லாத ரயில் இயக்கப்பட உள்ளது.

இந்த ரயில் தினமும் காலை 9.20 மணிக்கு கோவையி லிருந்து புறப்பட்டு மதியம் 1 மணிக்கு திண்டுக்கல் சென்றடையும். பின்னர், அங்கிருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு கோவை வந்தடையும்.

இந்த ரயில் போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலைப்பேட்டை, மைவாடி சாலை, மடத்துக்குளம், புஷ்பத்தூர், பழநி, சத்திரப்பட்டி, ஒட்டன்சத்திரம், அக்கரைப்பட்டி ஆகிய ரயில்நிலையங்களில் நின்று செல்லும்’’ எனக் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in