Published : 11 Jan 2023 06:15 AM
Last Updated : 11 Jan 2023 06:15 AM

சென்னை: எம்ஜிஆரின் பிறந்தநாள்; 4 நாள் பொதுக்கூட்டம்: அதிமுக அறிவிப்பு

சென்னை: முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் உள்ள சட்டப்பேரவை தொகுதிகளில் ஜன.19-முதல் ஜன.22-ம் தேதி வரை 4 நாட்களுக்கு பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

இதுதொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக நிறுவனத் தலைவரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 106-வது பிறந்தநாளை முன்னிட்டு, பொதுக்கூட்டங்கள் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் உள்ள சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் கட்சி அமைப்பு செயல்படும் பிற மாநிலங்களில் ஜன.19-ம் தேதி முதல் ஜன.22-ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறவுள்ளன.

அரியலூரில் வரும் 20-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி பேசவுள்ளார். மாவட்டங்களில் கட்சியின் மாவட்டச் செயலர்கள் பங்கேற்று பேசுவர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x