Published : 09 Jan 2023 07:35 AM
Last Updated : 09 Jan 2023 07:35 AM

மாவட்ட தலைநகரங்களில் 11-ல் விசிக ஆர்ப்பாட்டம்

சென்னை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குறிப்பிட்ட சமூகத்தினர் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவை கொட்டிய சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்யக் கோரி வரும் 11-ம் தேதி விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்ட ட்விட்டர் பதிவு: வேங்கைவயலில் நடந்த இழிவான குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

இதை கண்டு கொள்ளாமல் இருந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் விசிக சார்பில் வரும் 11-ம் தேதி ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x