Published : 09 Jan 2023 06:08 AM
Last Updated : 09 Jan 2023 06:08 AM

8-வது வந்தே பாரத் ரயில்: ஓரிரு நாட்களில் பணி நிறைவடையும்

சென்னை: சென்னை பெரம்பூர் ஐசிஎஃப் தொழிற்சாலையில் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 7 ரயில்கள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன.

இவை டெல்லி-வாரணாசி, டெல்லி-காத்ரா, காந்தி நகர் -மும்பை, டெல்லி-யுனா, சென்னை-மைசூரு, பிலாஸ்பூர்-நாக்பூர், ஹவுரா-நியூ ஜல்பைகுரி இடையே இயக்கப்படுகின்றன.

இதையடுத்து, ஐசிஎஃப்-ல்8-வது வந்தே பாரத் ரயில் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணி ஓரிரு நாட்களில் நிறைவடைய உள்ளது.

இது செகந்திராபாத்-விஜயவாடா இடையே ஜனவரி 3-வது வாரம் முதல் இயக்கப்படவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x