

சென்னை: பள்ளிக் கல்வித்துறை செயலர் காகர்லா உஷா நேற்று வெளியிட்ட அரசாணை:
பள்ளிக் கல்வித் துறையின் கீழ் 4 ஆயிரத்து 989 இடைநிலை ஆசிரியர்கள், 5 ஆயிரத்து 154 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 3 ஆயிரத்து 876 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 14 ஆயிரத்து 19 காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. பள்ளி மேலாண்மைக் குழு மூலம் இப் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது தொடர்பாக சமீபத்தில் கல்வித்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி, பள்ளி மேலாண்மை குழு மூலம் காலியாக உள்ள 14 ஆயிரத்து 19 ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.