Published : 17 Dec 2016 09:17 AM
Last Updated : 17 Dec 2016 09:17 AM
கேரள மாநிலம் நிலம்பூர் வனப் பகுதியில் சில நாட்களுக்கு முன் போலீஸாருக்கும், மாவோயிஸ்ட் களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், மாவோ யிஸ்ட்கள் குப்பு தேவராஜ், அஜிதா ஆகியோர் சுட்டுக் கொல் லப்பட்டனர். இதற்கு பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், கேரளாவில் போலி என்கவுன்ட்டரில் மாவோ யிஸ்ட்கள் சுட்டுக்கொல்லப்பட்ட தாக புகார் தெரிவித்தும், இதற்கு கண்டனம் தெரிவித்தும், கோவை மத்திய சிறையில் மாவோயிஸ்ட்கள் ரூபேஷ், வீரமணி, அனூப் ஆகியோர் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடல்நலக் குறை வால் மாவோயிஸ்ட்கள் ஷைனா, கண்ணன் ஆகியோர் உண்ணா விரதத்தில் ஈடுபடவில்லை.
இதுகுறித்து சிறைத் துறை அதிகாரிகள் கூறும்போது, “நேற்று காலை மற்றும் பிற்பகலில் மாவோயிஸ்ட்கள் 3 பேர் உணவு சாப்பிடவில்லை. மாலையில் உணவு சாப்பிட்டனர்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT