Published : 30 Dec 2016 04:00 PM
Last Updated : 30 Dec 2016 04:00 PM

தொலைதூரக்கல்வி படிப்புக்கு விண்ணப்பிக்க ஜனவரி 16 வரை காலஅவகாசம்: இக்னோ பல்கலை. அறிவிப்பு

இக்னோ பல்கலைக்கழகத்தில் தொலைதூரக்கல்வி படிப்புகளில் சேருவதற்கான கடைசி தேதி ஜனவரி 16-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு பல்கலைக்கழகமான இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் (இக்னோ) 2017 ஜனவரி பருவத்தில் இளநிலை, முதுநிலை, பட்டயம், சான்றிதழ் படிப்புகளில் சேருவதற்கான கடைசி தேதி டிசம்பர் 30-ம் தேதி என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு தொலைதூரக்கல்வி படிப்புகளில் சேருவதற்கான கடைசி தேதி ஜனவரி 16-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக இக்னோ பல்கலைக்கழக சென்னை மண்டல இயக்குநர் எஸ்.கிஷோர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x