Published : 04 Jan 2023 04:03 AM
Last Updated : 04 Jan 2023 04:03 AM

கோவை - ஜபல்பூர் வாராந்திர ரயில் சேவை ஏப்ரல் வரை நீட்டிப்பு

பிரதிநிதித்துவப் படம்

கோவை: சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூர்-கோவை இடையிலான சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஜபல்பூர் - கோவை இடையே வெள்ளிக்கிழமை தோறும் இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்:02198) வரும் 6-ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரையும்,

கோவை-ஜபல்பூர் இடையே திங்கட் கிழமை தோறும் இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்:02197) வரும் 9-ம் தேதி முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. செல்லும் வழியில் இந்த ரயில்கள், பாலக்காடு, சொர்ணூர், மங்களூரு உள்ளிட்ட ரயில்நிலையங்களில் நின்று செல்லும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x