Published : 05 Dec 2016 12:19 PM
Last Updated : 05 Dec 2016 12:19 PM
முதல்வர் நலம் பெற வேண்டும் என காத்திருப்போம் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து திருமாவளவன் கூறியதாவது:
''முதல்வர் சிக்கலான நிலையில் இருக்கிறார் என்பதை யூகிக்க வேண்டி இருக்கிறது. அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம், ராஜ்நாத் சிங் சென்னைக்கு வர இருப்பது, சட்டம்- ஒழுங்கை பாதுக்காக போலீஸார் செய்துள்ள முன்னேற்பாடுகள் ஆகியவை முதல்வர் நலம் பெற வேண்டும் என்ற நம்பிக்கையை கரைத்துக் கொண்டிருக்கிறது
முதல்வர் நலம் பெற வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனால், முதல்வருக்கு மாரடைப்பு என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. கார்டியாக் அரெஸ்ட் என்ற சொல்லை வழக்கமாக பயன்படுத்துவதில்லை. ஆனால் அந்த சொல் ஆழமானது. இதய அடைப்பு அல்லது வலியாகவோ பார்க்கலாம்.
நடைபெற்றுக்கொண்டிருக்கும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை முதல்வர் உடல் நிலை குறித்த நம்பிக்கையை தகர்த்துக் கொண்டிருக்கிறது.
அதிமுக தொண்டர்களின் பிரார்த்தனையும், வேண்டுதல்களும் தரும் நம்பிக்கையை மருத்துவ அறிக்கை தரவில்லை. முதல்வர் நலம் பெற வேண்டும் என காத்திருப்போம்'' என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT