Published : 12 Dec 2016 08:53 AM
Last Updated : 12 Dec 2016 08:53 AM

திரையரங்கில் தேசிய கீதம் ஒலிக்கும்போது அமர்ந்திருந்த பெண்கள் மீது தாக்குதல்

திரையரங்குகளில் திரைப்படம் காண்பிக்கும் முன் தேசிய கீதம் பாட வேண்டும் என்ற உத்தரவு உள்ளது. அதன்படி, அனைத்து திரையரங்குகளிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு வருகிறது. நேற்று எம்ஜிஆர் நகரில் உள்ள திரையரங்கு ஒன்றில் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது.

அப்போது, அனைவரும் எழுந்து நின்ற நிலையில், இரண்டு இளம் பெண்கள் மட்டும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளனர். இதனால், ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் சிலர் அந்த பெண்களிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.

வாக்குவாதம் மோதலாகி பெண்கள் மீது தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்து எம்ஜிஆர் நகர் போலீஸார் சம்பந்தப்பட்ட பெண்களையும், இளைஞர்களையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x