மதன், பச்சமுத்து மீதான பண மோசடி வழக்கு: சிபிஐக்கு மாற்றக்கோரிய 16 மனுக்கள் தள்ளுபடி - உயர் நீதிமன்றம் உத்தரவு

மதன், பச்சமுத்து மீதான பண மோசடி வழக்கு: சிபிஐக்கு மாற்றக்கோரிய 16 மனுக்கள் தள்ளுபடி - உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக வேந்தர் மூவிஸ் மதன் மற்றும் பச்சமுத்துவுக்கு எதிரான வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி தொடரப்பட்ட 16 மனுக்களையும் உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி யில் இடம் வாங்கித் தருவதாக கூறி ரூ. 71 கோடி வரை மோசடி செய்ததாக வேந்தர் மூவிஸ் மதன் மற்றும் பச்சமுத்து மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் பச்சமுத்து ஏற்கெனவே கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளார். தலைமறைவாக இருந்த மதன் கடந்த 20-ம் தேதி திருப்பூரில் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதன் மற்றும் பச்சமுத்துவுக்கு எதிராக பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் தரப்பில் மொத்தம் 16 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

பெற்றோர் தரப்பில் வழக் கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜ் ஆஜ ராகி வருகிறார். இந்த வழக்கில் போலீஸார் மதனுக்கும், பச்சமுத்து வுக்கும் ஆதரவாக செயல்படுவ தாகவும், விசாரணை தகவல்கள் எதையும் புகார்தாரர்களான பாதிக் கப்பட்ட பெற்றோருக்கு தெரிவிப்ப தில்லை எனவும், விசாரணை முறை யாக நடைபெறவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கில் டிசம்பர் 1-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என ஏற்கெனவே நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன், எஸ்.பாஸ்கரன் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டிருந்தது.

அவசியமில்லை

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நேற்று மீண்டும் இதே அமர்வில் நடந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘வழக்கு விசாரணை சரியான கோணத்தில்தான் சென்று கொண்டிருக்கிறது. இதை சிபிஐக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை. 2 ஐபிஎஸ் அதிகாரிகள் இதற்காக நியமிக்கப்பட்டு அவர்களின் மேற் பார்வையில் விசாரணை சென்று கொண்டிருக்கிறது.

எனவே 16 மனுக் களும் தள்ளுபடி செய்யப்படுகிறது. அதேநேரம், இந்த வழக்கில் கைதான பச்சமுத்துவுக்கு ஜாமீன் வழங்கிய மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவுப்படி அவர் ரூ. 75 கோடியை சைதாப் பேட்டை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்துள்ளார். எனவே பணம் கொடுத்து பாதிக்கப்பட்ட மாணவர் கள் மற்றும் அவர்களின் பெற்றோர் உரிய ஆதாரங்களுடன் சம் பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகி, பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்’’ என உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in