Last Updated : 30 Dec, 2022 11:36 AM

 

Published : 30 Dec 2022 11:36 AM
Last Updated : 30 Dec 2022 11:36 AM

தாயின் இழப்பைத் தாங்கும் மனவலிமையை பிரதமர் மோடிக்கு இறைவன் அருளட்டும்: முதல்வர் ரங்கசாமி இரங்கல்

மறைந்த தனது தாயாருடன் பிரதமர் மோடி | கோப்புப்படம்

புதுச்சேரி: பாசத்திற்கு உரிய அன்னையின் இழப்பு தரும் வலியை தாங்கிக்கொள்ளும் மனவலிமையை பிரதமர் மோடிக்கு இறைவன் அருளட்டும் என்று முதல்வர் ரங்கசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், ''இழப்பு தரும் வலியை தாங்கிக்கொள்ளும் மனவலிமையை பிரதமர் மோடிக்கு இறைவன் அருளட்டும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். அன்பிற்குரிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தாயார் ஹிராபென் உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்கிற செய்தி ஆழ்ந்த வருத்தத்தையும், துயரத்தையும் தருவதாக உள்ளது.

உலகின் மிகச் சிறந்த, வலிமையான தலைவராக பிரதமர் நரேந்திர மோடி திகழ்வதற்கு, அன்னை ஹிராபென்னின் அன்பும், ஆசியும், அரவணைப்பும் அவருக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக விளங்கின. அத்தகைய பாசத்திற்குரிய அன்னையின் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்று. இந்த இழப்பு தரும் வலியை தாங்கிக்கொள்ளும் மனவலிமையை பிரதமர் நரேந்திர மோடிக்கு இறைவன் அருளட்டும்.

தாயை இழந்து வாடும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அன்னை ஹிராபென் அவர்களது ஆன்மா எல்லாம் வல்ல இறைவனின் திருவடிகளில் சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x