Published : 05 Dec 2016 10:53 AM
Last Updated : 05 Dec 2016 10:53 AM

மக்களின் பிரார்த்தனை வீண் போகாது: திருநாவுக்கரசர்

மக்களின் பிரார்த்தனை வீண் போகாது. முதல்வர் ஜெயலலிதா பூரண உடல் நலம் பெறுவார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (திங்கள்கிழமை) அவர் வெளியிட்ட அறிக்கையில், ''அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா மாரடைப்பிற்குள்ளாகி தீவிர சிகிச்சை பெற்று வருகிற செய்தி அதிர்ச்சியும், வேதனையும் தருகிறது. அவரது உடல் நிலை நல்ல முன்னேற்றம் கண்டு வருவதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் அறிவிக்கப்பட்ட நிலையில் திடீர் மாரடைப்பு கவலை தருகிறது.

தமிழ்நாடு முழுவதும் ஜெயலலிதா பூரண உடல் நலம் பெற எல்லோரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். மக்களின் பிரார்த்தனை வீண் போகாது. முதல்வர் ஜெயலலிதா பூரண உடல் நலம் பெற என் சார்பிலும், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பிலும் பிரார்த்திக்கிறேன்.

ஆளுநரும், தமிழக அரசும், மத்திய அரசும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை தேறிட உலகின் எந்தப் பகுதியில் இருந்தும் சிறந்த மருத்துவர்களோ, தேவையான சிறப்பு மருந்துகளோ தேவைப்பட்டால் வரவழைத்து அதிகபட்ச அக்கறையோடு அவரது உடல் நிலையை சரி செய்ய எல்லா உயரிய, உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டும்'' என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x