கடலில் தத்தளித்த 11 மீனவர்கள் மீட்பு

கடலில் தத்தளித்த 11 மீனவர்கள் மீட்பு
Updated on
1 min read

சென்னை காசிமேட்டைச் சேர்ந்த பாரி என்பவருக்கு சொந்தமான படகில் அல்போன்ஸ் என்பவர் உட்பட 11 பேர் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கடந்த 9-ம் தேதி கடலுக்குள் சென்றவர்கள் நேற்று முன்தினம் இரவு கரை திரும்பிக் கொண்டிருந்தனர். ‘வார்தா’ புயல் காரணமாக காற்று மற்றும் அலையின் சீற்றம் அதிகமாக இருந்ததால் கரைக்குத் திரும்ப முடியாமல் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தனர். அதைத் தொடர்ந்து நேற்று காலை சென்னை துறைமுகத்தில் இருந்து கடலோர காவல் பாதுகாப்புப் படையினர் ஒரு கப்பலில் கடலுக்குள் சென்று 11 மீனவர்களையும் அவர்களது படகையும் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in