

மதுரை வேலம்மாள் மருத்து வமனை -‘தி இந்து’ தமிழ் இணைந்து நடத்தும் மார்கழி மஹோத்ஸவத்தில் கர்னாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதன், வீணை இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்யா ஆகியோரின் இசை நிகழ்ச்சிகள் வரும் ஜன. 7, 8 தேதிகளில் நடக்கவுள்ளதாக வேலம் மாள் கல்வி குழுமத் தலைவர் எம்.வி.முத்துராமலிங்கம் தெரிவித் துள்ளார்.
இந்த சிறப்பு இசை நிகழ்ச்சிகள் குறித்து எம்.வி.முத்துராமலிங்கம் நேற்று கூறியதாவது:
வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் இணைந்து கடந்த ஆண்டில் மார்கழி மஹோத்ஸவ இசை நிகழ்ச்சியை நடத்தின. அதில், நித்ய மகாதேவன் இன்னிசை, கத்ரி கோபால்நாத்தின் சாக்ஸபோன் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மதுரை மட்டுமின்றி சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த இசைப் பிரியர்கள் ஏராளமானோர் பங் கேற்று சிறப்பித்தனர்.
இதன் தொடர்ச்சியாக இரண்டாம் ஆண்டு மார்கழி மஹோத்ஸவ இசை நிகழ்ச்சிகள் வரும் 2017 ஜன. 7-ம் தேதி தொடங்குகின்றன. விரகனூரில் உள்ள வேலம்மாள் பொறியியல் கல்லூரியிலுள்ள காமராஜர் அரங்கில் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
முதல் நாளான ஜன. 7-ம் தேதி சனிக்கிழமை கலைமாமணி சுதா ரகுநாதனின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 2-ம் நாளான ஜன. 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கலைமாமணி ராஜேஷ் வைத்யா குழுவினரின் வீணை இசைக் கச்சேரி நடைபெறும். இரு நிகழ்ச்சி களும் மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 8.30 மணிக்கு நிறைவடையும்.
நிகழ்சிக்கான அனுமதி இலவசம். ஆனால் அழைப்பிதழ் அவசியம். அழைப்பிதழை பெற வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை 0452-2510114, 96777 36461 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம் என்றார்.