Published : 28 Dec 2016 09:21 AM
Last Updated : 28 Dec 2016 09:21 AM
‘வார்தா’ புயல் மீட்புப் பணியில் ஈடு பட்டு வந்த வெளி மாநில மற்றும் மாவட்ட போலீஸார் பணிகளை முடித்துவிட்டு திரும்பிச் சென்றனர்.
கடந்த 12ம் தேதி ‘வார்தா’ புயல் சென்னையை தாக்கியது. இதில், ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங் களும் சேதம் அடைந்தன. மீட்புப் பணியில் பொதுப் பணித்துறை யினர், மின் வாரிய ஊழியர்கள், மாநகராட்சி ஊழியர்கள் உட்பட பல அரசு துறைகளைச் சேர்ந்தவர் கள் ஈடுபட்டனர். தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரும் பணியில் இருந்தனர்.
சென்னையைச் சேர்ந்த 15 ஆயிரம் போலீஸாரும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களுடன் தீயணைப்புப் படை வீரர்கள் 1,100 பேரும் ஈடுபட்டனர். இதுபோக வெளிமாவட்டங்களில் இருந்து 3 ஆயிரம் போலீஸார் வரவழைக்கப்பட்டனர். ஆந்திரா, தெலங்கானாவில் இருந்து 900 போலீஸார் சென்னைக்கு வந்தனர்.
தற்போது, மீட்புப் பணிகள் முழு வதும் நிறைவடைந்து விட்டன. இதையடுத்து, மீட்புப் பணிக்காக சென்னை வந்திருந்த வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட போலீஸார் திருப்பி அனுப்பி வைக்கப் பட்டனர். அவர்களுக்கு சென்னை காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் நன்றி தெரிவித்து அனுப்பி வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT