Published : 24 Dec 2016 09:08 AM
Last Updated : 24 Dec 2016 09:08 AM
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவிக்க விரைவில் தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.
முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி காலமானார். அதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகியுள்ளார். முதல்வரும், அமைச்சர்களும் பணிகளைத் தொடங்கியுள்ள நிலையில் ஜெயலலி தாவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் விரை வில் நடைபெறும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.
அதிமுக பொதுக்குழு 29-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள் ளது. எனவே, அதற்கு முன்பாக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டு ஜெயலலிதாவுக்கு இரங்கல் தீர்மானம் நிறை வேற்றப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.
மறைந்த கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ, முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி உள்ளிட்டோருக்கும் இரங்கல் தெரிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT