Published : 16 Dec 2016 12:22 PM
Last Updated : 16 Dec 2016 12:22 PM
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் 1964-ல் ஏற்பட்ட புயலின்போது சேதமடைந்த கட்டி டங்களை பாதுகாக்க தொல்லியல் துறை, சுற்றுலா துறையுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. இதற்காக ரூ.3 கோடி மதிப்பில் திட்ட வரைவு மேற்கொள்ள அனுமதி வேண்டி தமிழக அரசுக்கு மாவட்ட நிர்வாகம் கடிதம் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், தனுஷ்கோடியில் பழமையான கட்டிடங்களின் உச்சியில் ஏறி செல்பி புகைப்படம் எடுப்பதில் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த மாதம்தான், அங்கிருந்த 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த தனுஷ்கோடி தேவாலயத்தின் சுற்றுச் சுவர் பலத்த மழை காரணமாக இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து சமூக ஆர்வலர் முகவை முனிஸ் கூறியதாவது: தனுஷ்கோடியை யுனெஸ்கோ பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும்.
தனுஷ்கோடிக்கு வரும் செல்பி பிரியர்கள் இங்குள்ள ஆள் அரவமற்ற பகுதிகளில் உள்ள பழமை வாய்ந்த கட்டிடங்களின் உச்சிக்கு சென்று புகைப்படங்கள் எடுத்து வருகின்றனர். இதனால் கட்டிடங்கள் இடிந்து சுற்றுலா பயணிகள் கீழே விழுந்து உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இக் கட்டிடங்களைச் சுற்றி வேலி அமைத்து பாதுகாக்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT