Published : 06 Dec 2016 07:31 AM
Last Updated : 06 Dec 2016 07:31 AM

இறுதி வரை போராடியவர் ஜெயலலிதா: ராதிகா புகழஞ்சலி

மக்களின் இதயத்தில் வெற்றிடத்தை விட்டுச் சென்றுவிட்டார் என்று ஜெயலலிதா மறைவுக்கு ராதிகா இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ராதிகா சரத்குமார், "முதல்வர் ஜெயலலிதா மறைவு செய்திக் கேட்டு மிகவும் துயரம் கொண்டேன்.

லட்சக்கணக்கான மக்களின் இதயத்தில் வெற்றிடத்தை விட்டுச் சென்றுவிட்டார். அவர் மக்களில் ஒருவர், உற்சாகமானவர், வலுவானவர், கம்பீரமானவர். இறுதியிலும் போராடிச் சென்றிருக்கிறார்.

மக்களின் இதயத்தில் பெரிய வெற்றிடத்தை விட்டுச் சென்றிருக்கிறார். அவரை சந்தித்த நபர்களிடம் எல்லாம் அவருடைய சிறுதுளியை விட்டுச் சென்றுள்ளார். அனைவருக்கும் தூண்டுகோளாக இருந்தவர்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ராதிகா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x