Published : 29 Dec 2016 09:31 AM
Last Updated : 29 Dec 2016 09:31 AM
முதல்கட்ட அட்டவணை தயாரித்த பிறகு காலியாகவுள்ள இடங்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடியில் ரயில் டிக்கெட்கள் விற்பனை செய்யப்படும் என ரயில்வே துறை அறிவித் துள்ளது.
ரயில்கள் புறப்படுவதற்கு 3 அல்லது 4 மணி நேரத்துக்கு முன்பு பயணிகள் அட்டவணை தயார் செய்யப்படும். இந்த அட்டவணை தயார் செய்யப்பட்ட பின் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் காலி இடம் இருந்தால், அதற்கான டிக்கெட்களை பெறும்போது அதில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.
இந்த புதிய முறை வரும் 1-ம் தேதி முதல் அடுத்த நான்கு மாதங்களுக்கு பரிசோதனை முறையில் அமலில் இருக்கும். அதிகளவில் வரவேற்பு இருக்கும் பட்சத்தில் இது தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT