எலி மருந்துக்கு நிரந்தர தடை; 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்கள் தடை: தமிழக அரசு உத்தரவு

கோப்புப் படம் |
கோப்புப் படம் |
Updated on
1 min read

சென்னை: தமிழ்நாட்டில் அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்களுக்கு தடை செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தற்கொலைகளை தடுக்கும் வகையில் அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அரசாணை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி monocrotophos, profenofos, acephate, profenofos + cypermethrin, chlorpyrifos + cypermethrin உள்ளிட்ட பூச்சிக்கொல்லிகளுக்கு 60 நாட்கள் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் எலிகளை கொல்லப் பயன்படுத்தப்படும் மஞ்சள் பாஸ்பரஸ் என்ற ரடோல் பூச்சிக்கொல்லி மருந்திற்கு நிரந்தர தடையும் விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in