தலைமைச் செயலக உதவி அலுவலர் பணிக்கு தேர்வு: டிச. 18-ம் தேதி நடைபெறுகிறது

தலைமைச் செயலக உதவி அலுவலர் பணிக்கு தேர்வு: டிச. 18-ம் தேதி நடைபெறுகிறது
Updated on
1 min read

சென்னை: தலைமைச் செயலக உதவி அலுவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு டிச. 18-ம் தேதி நடைபெற இருக்கிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணியில் அடங்கிய உதவிப் பிரிவு அலுவலர், உதவியாளர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு, டிச. 18-ம் தேதி காலை மற்றும் மதியம் நடைபெற உள்ளது.

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

நுழைவுச் சீட்டு பதிவிறக்கம்: விண்ணப்பதாரர்கள் ஒருமுறை பதிவேற்றம் (OTR) மூலம் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக் கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்வாறு தமிழ்நாடுஅரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in