சென்னையில் காலை முதல் பரவலாக பல இடங்களிலும் தொடர் மழை 

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: சென்னையில் அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

காலையில் விட்டு, விட்டு சாரல் மழை பெய்து வந்த நிலையில், காலை 10 மணி முதல் தொடர்மழை பெய்து வருகிறது. குறிப்பாக மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், திருவல்லிக்கேணி, அண்ணாசாலை உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்னகல்லார் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தலா 9 செ.மீ மழையும், பட்டுக்கோட்டையில் 8 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது. சென்னையில் சராசரியாக நேற்று 13 செ.மீ மழை பதிவாகி உள்ளது. இந்நிலையில் இன்று (டிச.12) தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in