Published : 08 Dec 2022 07:11 AM
Last Updated : 08 Dec 2022 07:11 AM

பிலாஸ்பூர் - நாக்பூர் இடையே வந்தே பாரத் ரயில் விரைவில் இயக்கம்

சென்னை: சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டித் தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில், ரூ.97 கோடி மதிப்பில் "வந்தே பாரத் விரைவு ரயில்" தயாரிக்கப்பட்டு, டெல்லி- வாரணாசி, டெல்லி-காத்ரா இடையே இயக்கப்படுகின்றன. இதேபோல, அதிநவீனத் தொழில்நுட்பத்துடன் 3 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு, வெவ்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்படுகின்றன. இதில் ஒரு வந்தே பாரத் ரயில், சென்னை-மைசூர் இடையே இயக்கப்படுகிறது.

இந்நிலையில், சென்னை ஐசிஎஃப்-ல் தயாரிக்கப்பட்ட 6-வது வந்தே பாரத் ரயில், சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர்- மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் இடையே இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் சேவையை பிரமதர் மோடி வரும் 11-ம் தேதி தொடங்கி வைக்கிறார்.

இதுகுறித்து ஐசிஎஃப் அதிகாரிகள் கூறும்போது, "அதிநவீனத் தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள 6-வது வந்தே பாரத் ரயில், பிலாஸ்பூர்-நாக்பூர் இடையேஇயக்கப்பட உள்ளது. மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இயங்கும் திறன்கொண்ட இந்த ரயிலில், அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன" என்றனர்.

அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் 75 வந்தே பாரத் ரயில்களைத் தயாரித்து, இயக்கரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x