Published : 27 Dec 2016 02:09 PM
Last Updated : 27 Dec 2016 02:09 PM

பணமதிப்பு நீக்க பிரச்சினை: ரஜினியிடம் விவரித்த ப.சிதம்பரம்

முன்னாள் மத்திய நிதியமைச்சரான ப.சிதம்பரம் சமீபத்தில் ரஜினிகாந்தைச் சந்தித்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இரு தினங்களுக்கு முன்பு ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.

இந்தச் சந்திப்பின்போது, தற்போதைய தமிழக மற்றும் இந்திய அரசியல் சூழல் குறித்து இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

நாட்டில் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் எழுந்துள்ள பிரச்சனைகள் குறித்து ரஜினிகாந்திடம் ப.சிதம்பரம் விவரித்ததாகவும் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x