Published : 13 Dec 2016 01:40 PM
Last Updated : 13 Dec 2016 01:40 PM

அதிமுக தலைமை விவகாரத்தில் சாதியை புகுத்துவது ஏன்?- காங்கிரஸ் முன்னாள் எம்.பி. கேள்வி

அதிமுக தலைமை விவகாரத்தில் சாதியை புகுத்துவது ஏன் என ராமநாதபுரம் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. டாக்டர் ராஜேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியது: முதல்வர் ஜெயலலிதா மறைந்த 7 நாட்களுக்குள் சாதி நுழைந்துள்ளது. இது பாஜகவின் சதித் திட்டமாகவே கருதப்படுகிறது. அதிமுகவை பலவீனப்படுத்தி வலுவிழக்கச் செய்வதற்கு சில அரசியல் கட்சிகள் துணைபோகின்றன. முதல்வர் நியமனம், கட்சித் தலைமை என்பது அதிமுகவின் உட்கட்சி விவகாரம். சாதியின் பெயரால் கருணாநிதியும், ஜெயலலிதாவும் கட்சியை வளர்க்கவில்லை. அதிமுக தலைமை விவகாரத்தில் மட்டும் சாதி புகுந்தது புரியவில்லை. அதிமுக தலைமையை சசிகலா ஏற்பதில் மட்டும் சாதியை சொல்லி பிளவுபடுத்தவேண்டாம்.

எம்ஜிஆர் என்ன நினைத்தாரோ அவ்வழியில் ஜெயலலிதா ஆட்சி, கட்சியை நடத்தினார். அவருடன் 30 ஆண்டு உறுதுணையாக இருந்து சில கஷ்டம், நஷ்டத்தில் பங்கு பெற்றவர் சசிகலா. அவர் அதிமுகவின் வழிகாட்டியாக இருக்கக் கூடாதா என்ற கேள்வி எழுகிறது. பட சந்தர்ப்பத்தை தவறவிட்ட ஒரு நடிகரும், நடிகையும் ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சை பற்றி தேவையற்ற சர்ச்சைகளை எழுப்பியுள்ளனர். முதலில் அவர்கள் வீட்டை ஒழுங்குபடுத்திவிட்டு, பின்னர் பிறர் வீடு பற்றி யோசிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x