Published : 24 Dec 2016 09:17 AM
Last Updated : 24 Dec 2016 09:17 AM
பாமக பொதுக்குழு கூட்டம் வரும் 30-ம் தேதி நடை பெறும் என அறிவிக்கப்பட் டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத் தில் பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி, இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றியத் தலைவர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், இளைஞர் அணி, மகளிரணி உள்ளிட்ட அணிகளின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங் கேற்பார்கள் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
இது குறித்து பாமக நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் இறுதியில் பொதுக்குழு கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டுக்கான கூட்டம் வரும் 30-ம் தேதி தைலாபுரத்தில் நடைபெறவுள்ளது. இதில் கட்சியின் அடுத்த ஆண்டுக்கான செயல் திட்டம் வகுக்கப்படும். ஜெயலலிதா மறைவால் தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள, ஏற்படப் போகும் மாற்றம் குறித்தும், உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் விவாதிக்கப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT