Published : 30 Nov 2022 06:52 AM
Last Updated : 30 Nov 2022 06:52 AM

கார்த்திகை தீபத்தையொட்டி சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் தி.மலை வரை நீட்டிப்பு

சென்னை: கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கன்டோன்மென்ட் வரை செல்லும் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படவுள்ளது. இந்த நீட்டிப்பு டிச.5 முதல் டிச.7 வரை அமலில் இருக்கும். இதுபோல், திருவண்ணாமலையில் இருந்து டிச.6 முதல் டிச.8 வரை 3 நாட்களுக்கு சென்னை கடற்கரை வரை மின்சார ரயில் இயக்கப்படவுள்ளது.

சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் அன்று நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலை அடையும். மறுமார்க்கமாக, திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு வேலூர் கன்டோன்மென்ட்டை அதிகாலை 5.35 மணிக்கு அடையும். இந்த ரயில் காலை 9.05 மணிக்கு சென்னை கடற்கரையை அடையும். இந்த ரயில் கனியம்பாடி, கண்ணமங்கலம், ஆரணி ரோடு, போளூர், அகரம் சிப்பந்தி துரிஞ்சபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x