Published : 23 Dec 2016 08:19 AM
Last Updated : 23 Dec 2016 08:19 AM

அதிமுக பொதுக்குழு: ஓரிரு நாளில் தேதி அறிவிப்பு

ஜெயலலிதா இறந்து 17 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு இன்னும் யாரும் நியமனம் செய்யப்படவில்லை. ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, பொதுச் செயலாளர் பதவியை ஏற்க வேண்டும் என்று கட்சியின் நிர்வாகிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, வரும் 29-ம் தேதி பொதுக்குழு கூடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிமுக நிர்வா கிகள் சிலரிடம் கேட்டபோது, ‘‘அதிமுக பொதுக்குழுவைக் கூட்டுவது தொடர்பாக கட்சி யின் மூத்த நிர்வாகிகளிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. பொதுக் குழு கூடுவதற்கான தேதி, இடம் குறித்து ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x