Published : 29 Nov 2022 11:54 PM
Last Updated : 29 Nov 2022 11:54 PM

கார்த்திகை தீபத் திருவிழா | திருவண்ணாமலைக்கு 4 நாட்களில் 20 சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோப்புப்படம்

திருவண்ணாமலை: கார்த்திகைத் தீபத் திருவிழாவை முன்னிட்டு சென்னை, வேலூர், புதுச்சேரி, திருப்பாதிரிபுலியூர் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து திருவண்ணாமலைக்கு டிசம்பர் 5-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை 20 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. டிசம்பர் 6-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயில் மூலவர் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளன. கார்த்திகைத் தீபத் திருவிழாவுக்கு 30 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார். பக்தர்களின் வசதிக்காக டிசம்பர் 5-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை 20 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. சிறப்பு ரயில்களை தவிர, திருவண்ணாமலை வழியாக தினசரி வழக்கமாக இயக்கப்படும் அனைத்து ரயில்களும் தடையின்றி இயக்கப்பட உள்ளன.

டிசம்பர் 5-ம் தேதி

  • சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு வேலூர் (இரவு 9.45 மணி) வழியாக திருவண்ணாமலைக்கு 6-ம் தேதி அதிகாலை 00.05 மணிக்கு வந்தடைகிறது.
  • புதுச்சேரியில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் (இரவு 8.45 மணி) வழியாக திருவண்ணாமலைக்கு இரவு 10.30 மணிக்கு வந்தடைகிறது.

டிசம்பர் 6-ம் தேதி

  • திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் வழியாக புதுச்சேரியை காலை 6.20 மணிக்கு சென்றடைகிறது.
  • திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு வேலூர் வழியாக சென்னை கடற்கரையை காலை 9 மணிக்கு சென்றடைகிறது.
  • மயிலாடுதுறையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் (காலை 9.15 மணி) வழியாக திருவண்ணாமலையை காலை 10.55 மணிக்கு வந்தடைகிறது.
  • திருவண்ணாமலையில் இருந்து பகல் 12.40 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் வழியாக மயிலாடுதுறையை மாலை 5.40 மணிக்கு சென்றடைகிறது.
  • திருப்பாதிரிபுலியூரில் (கடலூர் மாவட்டம்) இரவு 8.50 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் (இரவு 9.35 மணி) வழியாக திருவண்ணாமலையை இரவு 10.50 மணிக்கு வந்தடைகிறது. பின்னர், திருவண்ணாமலையில் இருந்து 10.55 மணிக்கு புறப்பட்டு வேலூரை டிசம்பர் 7-ம் தேதி அதிகாலை 00.40 மணிக்கு சென்றடைகிறது.
  • சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு வேலூர் (இரவு 9.45 மணி) வழியாக திருவண்ணாமலையை டிசம்பர் 7-ம் தேதி அதிகாலை 00.05 மணிக்கு வந்தடைகிறது.
  • புதுச்சேரியில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் வழியாக (இரவு 8.45 மணி) திருவண்ணாமலையை இரவு 8.30 மணிக்கு வந்தடைகிறது.

டிசம்பர் 7-ம் தேதி

  • வேலூரியில் இருந்து அதிகாலை 1.30 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலையை அதிகாலை 2.55 மணிக்கு வந்தடைகிறது. பின்னர், திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 3 மணிக்கு புறப்பட்டு திருப்பாதிரிபுலியூரை (கடலூர் மாவட்டம்) காலை 5.40 மணிக்கு சென்றடைகிறது.
  • திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் வழியாக புதுச்சேரியை காலை 6.20 மணிக்கு சென்றடைகிறது.
  • திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு வேலூர் வழியாக சென்னை கடற்கரையை காலை 9 மணிக்கு சென்றடைகிறது.
  • மயிலாடுதுறையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் வழியாக (காலை 9.15 மணி) திருவண்ணாமலையை காலை 10.55 மணிக்கு வந்தடைகிறது.
  • திருவண்ணாமலையில் இருந்து பகல் 12.40 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் வழியாக மயிலாடுதுறையை மாலை 5.40 மணிக்கு சென்றடைகிறது.
  • திருப்பாதிரிபுலியூரில் (கடலூர் மாவட்டம்) இருந்து இரவு 8.50 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் வழியாக (இரவு 9.35 மணி) திருவண்ணாமலையை இரவு 10.50 மணிக்கு வந்தடைகிறது. பின்னர், திருவண்ணாமலையில் இருந்து இரவு 10.55 மணிக்கு புறப்பட்டு வேலூரை டிசம்பர் 8-ம் தேதி அதிகாலை 00.40 மணிக்கு சென்றடைகிறது.
  • சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு வேலூர் வழியாக (இரவு 9.45 மணி) திருவண்ணாமலையை டிசம்பர் 8-ம் தேதி அதிகாலை 00.05 மணிக்கு வந்தடைகிறது.
  • புதுச்சேரியில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் வழியாக (இரவு 8.45 மணி) திருவண்ணாமலையை இரவு 10.30 மணிக்கு வந்தடைகிறது.

டிசம்பர் 8-ம் தேதி

  • வேலூரியில் இருந்து அதிகாலை 1.30 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலையை அதிகாலை 2.55 மணிக்கு வந்தடைகிறது. பின்னர், திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 3 மணிக்கு புறப்பட்டு திருப்பாதிரிபுலியூரை (கடலூர் மாவட்டம்) காலை 5.40 மணிக்கு சென்றடைகிறது.
  • திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் வழியாக புதுச்சேரியை காலை 6.20 மணிக்கு சென்றடைகிறது.திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு வேலூர் வழியாக சென்னை கடற்கரையை காலை 9 மணிக்கு சென்றடைகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x