

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வந்த மழை நேற்று ஓய்ந்தது. எனினும், கடல் தொடர்ந்து சீற்றத்துடன் காணப்பட்டதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
புயல் காரணமாக கடந்த 2 தினங்களாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வந்தது. மாவட்டம் முழுவதும் 397.40 மி.மீ மழை பதிவானது.
நேற்று மழை ஓய்ந்தது. எனினும், கடல் தொடர்ந்து சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் மாமல்லபுரம் மற்றும் சுற்றியுள்ள மீனவ கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான கடந்த 4 தினங்களாகவே மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்திருந்தனர். இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். மீன் வரத்து குறைந்தது. எதிர்பார்த்த அளவு மழை இல்லாததால் விவசாயிகளும் ஏமாற்றம் அடைந்தனர்.