தமிழக காங்கிரஸில் குழப்பமில்லை: ரூபி மனோகரன் எம்எல்ஏ விளக்கம்

தமிழக காங்கிரஸில் குழப்பமில்லை: ரூபி மனோகரன் எம்எல்ஏ விளக்கம்
Updated on
1 min read

நாகர்கோவில்: தமிழக காங்கிரஸில் குழப்பம் எதுவும் இல்லை என ரூபி மனோகரன் எம்எல்ஏ தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக காங்கிரஸில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுவிட்டது. கட்சியில் தற்போது குழப்பம் எதுவும் இல்லை. தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தமிழகத்தில் கட்சியின் ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்.

ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை மிகப்பெரிய எழுச்சியையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வரும் 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியை பெறும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in