

'வார்தா' புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் பணியில் 18 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர் என்று அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார்.
‘வார்தா’ புயலின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங் களில் 1 லட்சத்துக்கும் அதிகமான மரங்கள் சாய்ந்தன. மின் கம்பங்கள் சாய்ந்ததால் மின் விநியோகம் தடைபட்டது.
மின்சாரம், பால், குடிநீர் கிடைக்காமல் மக்கள் கடும் அவதிப்பட்டனர். மரங்களை அகற் றுவது உள்ளிட்ட பணிகள் போர்க்கால அடிப்படையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சீரமைப்புப் பணிகள் குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் கூறிய அமைச்சர் வேலுமணி, '' 'வார்தா' புயலால் பாதிக்கப்பட்ட இடங்கள் மாநகராட்சி சார்பில் சீரமைக்கப்பட்டு வருகிறது. சீரமைப்புப் பணியில் 18 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர். அதிகபட்சம் 2 நாட்களுக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்'' என்றார்.