Published : 26 Nov 2022 05:34 AM
Last Updated : 26 Nov 2022 05:34 AM

இரண்டு வாரங்களுக்கு வழக்கத்தைவிட குறைவாக மழை பெய்யும்

சென்னை: இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் நவ.17 முதல் 23-ம் தேதி வரையிலான ஒரு வாரத்தில், வழக்கமாக 34 மி.மீ. மழை கிடைக்கும். ஆனால் 3 மி.மீ. மழை மட்டுமே கிடைத்துள்ளது. இது வழக்கத்தை விட 91 சதவீதம் குறைவு. மேலும், கடந்த ஒரு வாரத்தில் 14 மாவட்டங்களில் மழையே பெய்யவில்லை. 22 மாவட்டங்களில் வழக்கத்தைவிட குறைவாக மழை பெய்தது.

கடந்த அக்.1 முதல் நவ. 23-ம் தேதி வரையிலான வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் வழக்கமாக 317 மி.மீ. மழை பெய்யும். இந்த முறை 330 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது வழக்கத்தைவிட 4 சதவீதம் அதிகம்.

கணினி சார்ந்த மாதிரி தகவல்களின்படி, டிச.8 வரையிலான அடுத்த இரு வாரங்களில் வழக்கத்தைவிட குறைவாகவே மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கேரள கடலோரப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, வரும் 29-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழைபெய்யக்கூடும். சென்னை, புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x