Published : 09 Dec 2016 11:40 AM
Last Updated : 09 Dec 2016 11:40 AM

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி தி.மலை ரயில் நிலையத்தில் பயணிகளிடம் 5 ரூபாய் கூடுதலாக வசூல்

கார்த்திகை தீபத் திருவிழாவை யொட்டி, பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதாகக் கூறி, 10 நாட்களுக்கு ஒவ்வொரு ரயில் பயணியிடமும் கூடுதலாக 5 ரூபாயை ரயில்வே நிர்வாகம் வசூலித்து வருகிறது.

தி.மலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திரு விழா கடந்த மாதம் 30-ம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. வரும் 12-ம் தேதி அதிகாலை 4 மணிய ளவில் பரணி தீபமும், அன்று மாலை 6 மணியளவில் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் ‘மகா தீபமும்’ ஏற்றப்படுகிறது. கார்த்திகை தீபத் திருவிழாவை தொடர்ந்து மறுநாள்(13-ம் தேதி) பவுர்ணமி என்பதால், மேற்கண்ட இரு நாட்களுக்கும் லட்சக்கணக் கான பக்தர்கள் கிரிவலம் செல் வார்கள்.

தீபத் திருவிழா மற்றும் பக்தர்களின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் சார்பில் சிறப்பு ரயில்கள் இயக் கப்படுகின்றன. சென்னை மற்றும் விழுப்புரத்தில் இருந்து சிறப்பு ரயில் கள் இயக்கப்படும். பாசஞ்சர் ரயில் சேவை என்று அறிவிக்கப் பட்டாலும், விரைவு ரயில்களுக்கான கட்டணமே வசூலிக்கப்படும். அதா வது, இரு மடங்கு கட்டணமாகும். சிறப்பு ரயில்கள் என்பதால், கட்டண அதிகரிப்பு குறித்து ஆட்சேபம் ஏதும் பக்தர்கள் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், தி. மலை ரயில் நிலையத்தில் வழங்கப்படும் ஒவ்வொரு பயணச் சீட்டுக்கும் ரூ.5 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இதற்கு பத்கர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ரயில்வே நிர்வா கத்திடம் கேட்டபோது, “கார்த்திகை தீபத் திருவிழா என்பதால் ரூ.15-க்கு அதிகமாக பயணச் சீட்டை பெறு வோரிடமிருந்து ரூ.5 கூடுதலதாக வசூலிக்கப்படுகிறது. கொடியேற் றம் நடைபெற்ற 3-ம் தேதியில் இருந்து அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும் நாள் வரை (வரும் 12-ம் தேதி) 5 ரூபாய் கூடுத லாக வசூலிக்கப்படும். கூடுதல் கட்டணம் வசூலிப்பு என்பது, தி.மலை ரயில் நிலையத்தில் மட்டுமே நடைபெறும். பிற ஊர்களில் நடைபெறாது. நகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டதால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதன்மூலம், பல லட்சம் ரூபாய் கூடுதலாக வசூலாகும்.

அந்தத் தொகையைக் கொண்டு, பக்தர்களின் அடிப்படை வசதிகள் செய்து கொள்ள நகராட்சி திட்டமிட்டுள்ளது. ஆனால், அந்தத் தொகை அவர் களுக்கு எப்போது கிடைக்கும் என்று தெரியாது. இந்த நடைமுறை கடந்த 20 ஆண்டுகளாகவே உள்ளது’’ என்றனர்.

இதுகுறித்து பயணிகள் கூறும் போது, ‘‘தீபத்துக்கு இயக்கப்படும் பாசஞ்சர் ரயில்களுக்கு விரைவு ரயில் கட்டணத்தை வசூலிக்கின்ற னர். அப்புறம் எதற்கு 5 ரூபாய் கூடுதலாக, எங்களிடம் பெறுகின்ற னர். ஜெயலலிதா மறைவை யொட்டி பேருந்துகள் இயக்கப்பட வில்லை. 5-ம் தேதி மாலை முதல் 7-ம் தேதி இரவு வரை ஆயிரக்கணக் கான பயணிகள், தி.மலை ரயில் நிலையத்தில் இருந்து பயணித்துள் ளனர். தீபம் மற்றும் பவுர்ணமி நாட்களிலும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்வார்கள். எங்களிடம் இருந்து கூடுதலாக வசூலிக்கப்படும் தொகை எவ்வ ளவு? மற்றும் அந்தத் தொகையை கொண்டு என்னென்ன? பணியை செய்தார்கள் என்று தெரிவிக்க வேண்டும்” என்றனர்.

இதுகுறித்து தி.மலை நகராட்சி ஆணையர் சுந்தராம்பாளிடம் கேட்ட போது, “ரயில்வே நிர்வாகத்திடம் இருந்து நகராட்சி சார்பில் எந்தத் தொகையும் கேட்கவில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x