

மிலாது நபி திருநாளை முன்னிட்டு வரும் 13-ம் தேதி செவ்வாய்க்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மிலாது நபி திருநாள் வரும் 13-ம் தேதி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படும் எனவும், எனவே அன்றைய தினம் அரசு விடுமுறை நாளாக மாநில அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து, அன்றை தினம் தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மத்திய அரசு பத்திரிகை தகவல் அலுவலகம் வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.