Published : 06 Dec 2016 02:17 AM
Last Updated : 06 Dec 2016 02:17 AM

நேசமிகு தலைவர் ஜெயலலிதா: சந்திரபாபு நாயுடு புகழஞ்சலி

நீண்ட கால நண்பர், அனைவரும் நேசிக்கக் கூடிய ஒரு தலைவர் என்று ஜெயலலிதாவுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, "முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு மிகவும் வேதனையளிக்கிறது.

நீண்ட கால நண்பர், அனைவரும் நேசிக்கக் கூடிய ஒரு தலைவர். அவருடைய நலன்விரும்பிகள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் மீது மிகவும் அக்கறைக் கொண்ட அவருடைய நினைவுகள் எப்போதுமே நம்மிடையே இருக்கும்" என்று தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x