Published : 12 Dec 2016 09:16 AM
Last Updated : 12 Dec 2016 09:16 AM
கச்சத்தீவு அந்தோணியார் ஆலயம் அருகே புதிய தேவாலய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா கடந்த 7-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. தமி ழக முதல்வர் ஜெயலலிதா கால மானதை முன்னிட்டு, ஆலயத் திறப்புவிழா தள்ளிவைக்கப் பட்டது.
இவ்விழாவில் கலந்துகொள்ள தமிழக மீனவர்களுக்கு அழைப்பு இல்லை என குற்றம் சாட்டப்பட்டு வந்தது. இவ்விழாவில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர். அனுமதி கிடைக்காத பட்சத்தில் 100 மீன வர்கள் அத்துமீறி படகுகளில் சென்று திறப்பு விழாவில் பங்கேற் போம் என ராமேசுவரம் உள்ளிட்ட தமிழக மீனவர்கள் அறிவித்தனர்.
இதனையடுத்து தமிழக மீனவர் களை அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. இந் திய வெளியுறவுத் துறை மேற் கொண்ட நடவடிக்கையால், ராமேசுவரம் வேர்க்கோடு சர்ச் பங்குத்தந்தை தலைமையில் மீனவப் பிரதிநிதிகள் 20 பேர் ஆலயத் திறப்பு விழாவில் பங்கேற்கலாம் என மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்கி உள்ளன.
இந்நிலையில் வரும் 23-ம் தேதி கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திறப்புவிழா நடைபெற உள்ளதாக யாழ்ப்பாணம் மறை மாவட்ட குரு முதல்வர் (ஆயர்) ஜோசப்தாஸ் ஜெபரெத்தினம் அறிவித்துள்ளார். மேலும் ஆலயத் திறப்பு விழாவில் பங்கேற்க வேண்டும் என ராமேசுவரம் வேர்க் கோடு பங்குத்தந்தை சகாய ராஜுக்கு யாழ்ப்பாணம் மறை மாவட்டத்தைச் சேர்ந்த பங்குத் தந்தை நேசன், இ-மெயில் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.
மீனவர்கள் கோரிக்கை
இந்த அறிவிப்புக்குப் பின், கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திறப்பு விழாவில் கலந்து கொள்ள ராமேசுவரம் மீனவர்கள் 100 பேரை அனுமதிக்க வேண்டும் என மீனவர் சங்கப் பிரதிநிதிகள் ஜேசுராஜா, என்.ஜே.போஸ், சகாயம், எமிரேட் ஆகியோர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன், தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று கடிதம் அனுப்பி உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT