Published : 11 Nov 2016 10:14 AM
Last Updated : 11 Nov 2016 10:14 AM

ரூ.2 கோடி ‘கேட்டமைன்’ பறிமுதல்: தூத்துக்குடியில் 6 பேர் கைது

தூத்துக்குடியில் போதைப் பொருள் கடத்தியதாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.2 கோடி மதிப்புள்ள 2 கிலோ ‘கேட்டமைன்’ என்ற போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி பாலவிநாயகர் கோயில் தெருவில் உள்ள தனியார் தங்கும் விடுதி முன் சிலர் போதைப் பொருள் பரிமாற்றம் செய்ய இருப்பதாக, போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. டிஎஸ்பி பாலசுப்பிரமணியன், ஆய்வாளர் கமலி தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த 7 பேர், ‘கேட்டமைன்’ என்ற போதைப் பொருளை பரிமாற் றம் செய்ய முயன்றனர். போலீ ஸார், அவர்களைச் சுற்றி வளைத்த னர். இதில், 6 பேர் போலீஸாரி டம் சிக்கினர். ஒருவர் தப்பி யோடிவிட்டார்.

தூத்துக்குடி அருகே முத்தையா புரத்தைச் சேர்ந்த மணிகண்டன்(28), மில்லர்புரத்தைச் சேர்ந்த கிங்ஸ் டன்(46), ஸ்ரீவைகுண்டம் அருகே பண்ணவிளையைச் சேர்ந்த ஸ்டீபன் புஷ்பராஜ்(39), புதியம்புத்தூரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன்(42), முத்தையாபுரத்தைச் சேர்ந்த இசக்கிராஜா(31), மில்லர்புரத்தைச் சேர்ந்த சாம் அருள்ராஜ்(30) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து 2 கிலோ எடையுள்ள ‘கேட்டமைன்’ போதைப் பொருள், ஒரு கார், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய் யப்பட்ட ‘கேட்டமைன்’ போதைப் பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.2 கோடி என போலீஸார் தெரிவித்தனர்.

தப்பியோடிய சுரேஷ் என்பவர், இவர்கள் 6 பேருக்கும் போதைப் பொருளை வழங்கியுள்ளார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 6 பேரும் நேற்று காலை தூத்துக்குடி 2-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க நீதித்துறை நடுவர் ஏ.கதிரவன் உத்தரவிட்டார்.

இதையடுத்து 6 பேரும் பாளை யங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x