Published : 27 Nov 2016 11:17 AM
Last Updated : 27 Nov 2016 11:17 AM

ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாத விவகாரம்: பண மதிப்பு நீக்கம் மட்டும் போதாது - வருமான வரித்துறை முன்னாள் முதன்மை ஆணையர் செந்தாமரை கண்ணன் கருத்து

500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவித்தது துணிச்சலான முடிவுதான். ஆனால் பண மதிப்பு நீக்கம் மட்டும் போதாது. தொடர்ந்து பல தொடர் நடவடிக்கை களை எடுக்கும் போதுதான் கறுப்பு பணத்தை நீக்க முடியும் என்று தமிழ்நாடு வருமான வரித்துறை முன்னாள் முதன்மை ஆணையர் செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.

பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளிலும், அஞ்சலகங்களிலும் கடந்த 24-ம் தேதி வரை காத்து நின்றனர். ஏடிஎம் மையங்கள் முன்பு மக்கள் கூட்டம் இன்னும் குறைந்தபாடில்லை. வணிக நிறுவனங்களில் வியாபாரம் அடியோடு குறைந்துவிட்டது. ரியல் எஸ்டேட் தொழிலின் எதிர்காலம் எந்த திசையில் போகும் என்பதை பொதுமக்களால் கணிக்க இயல வில்லை. தங்க, வைர நகைகளின் விலை ஏறுமா அல்லது இறங்குமா என தெரியவில்லை. பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல் லாது என்ற மத்திய அரசின் அறி விப்பால் தாங்கள் சார்ந்த துறைக ளில் எதிர்காலத்தில் எவ்வித மாற் றங்கள் உருவாகும் என்பதை அறிந்து கொள்ள அனைத்து தரப்பு மக்களுமே மிகவும் ஆர்வ மாக உள்ளனர். எனவே, இந்த விவகாரத்தில் பொதுமக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள், அவர் களின் சந்தேகங்கள், கேள்விகள் போன்றவற்றுக்கு பல்வேறு துறை களைச் சார்ந்த நிபுணர்களை திரட்டி ஒரு விவாத அரங்கிற்கு ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் சென்னையில் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்தி ருந்தது. இந்த நிகழ்ச்சியை தி இந்து தமிழ் நாளிதழுடன் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம், நியூஸ் 18 தமிழ் நாடு, செயின்ட் ஜான்ஸ் பப்ளிக் ஸ்கூல், பிசினஸ் லைன் ஆகியவை இணைந்து வழங்கின.

இந்த விவாத அரங்கில், வரு மானவரித்துறை முன்னாள் முதன்மை ஆணையர் எஸ்.செந்தாமரை கண்ணன், தமிழ்நாடு, புதுச் சேரி முன்னாள் அக்கவுன்டன்ட் ஜெனரல் நாகல்சாமி, ரிசர்வ் வங்கி முன்னாள் அதிகாரி கே.சுந்தரேசன், சேலம் ஆடிட்டர் வீ.ரவீந்திரன், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கே.அழகுராமன், கல்விக்கடன் விழிப் புணர்வு இயக்க தலைமை ஒருங்கி ணைப்பாளர் எம்.ராஜ்குமார், சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி, ரூபி பில்டர்ஸ் நிர்வாக இயக்குநர் ரூபி ஆர்.மனோகரன், இந்திய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கூட்டமைப் பின் தலைவர் சுரேஷ் கிருஷ்ணன், சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் துணை தலைவர் ராஜசேகரன், சங்கர் ஐஏஎஸ் அகாதமியின் நிறுவனர் சங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் சிறப்பு நிருபர் குள.சண்முகசுந்தரம் வர வேற்று அறிமுகவுரை ஆற்றினார். பிஸினஸ்லைன் ஆசிரியர் ஆர்.ஸ்ரீனி வாசன் விவாதத்தை நெறிப்படுத்தி னார். முதல்கட்டமாக, ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாதது என அறிவிக்கப்பட்டது தொடர்பான பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகள் வீடியோவில் ஒளி பரப்பு செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து, பிஸினஸ்லைன் ஆசிரி யர் ஸ்ரீனிவாசன் தொடக்கவுரையாற்றி னார். அப்போது அவர் கூறியதாவது:

கேள்வி எழுப்பும் பிரண்ட்லைன் இதழ் ஆசிரியர் விஜய்சங்கர்.

பல வாசகர்களின் சந்தேகங்கள் இங்கு ஒளிபரப்பப்பட்டன. ஒவ்வொரு வருக்கும் பிரத்யேகமான சந்தே கங்கள் இருந்தாலும், பொதுவாக அனைவருக்கும் சில சந்தேகங்கள் இருந்தன. பண மதிப்பு நீக்கத்துக்கான அவசியம் என்ன? கறுப்பு பணத்தை பெரும் பணக்காரர்கள் வைத்திருக்கும்போது இதனால் சாதாரண நபர் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? ரூ.500 மற்றும் 1,000 நோட்டுகளை நீக்கிவிட்டு புதிதாக ஏன் 2000 ரூபாய் நோட்டினை கொண்டுவரவேண்டும்? நோட்டு களை மதிப்பு நீக்கம் செய்ததால் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. தவிர இந்திய கரன்ஸி என்பது இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடு வாழ் இந்தியர்களிடமும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.இவ்வாறு ஆர்.ஸ்ரீனிவாசன் கூறினார்.

தமிழ்நாடு வருமான வரித்துறை முன்னாள் முதன்மை ஆணையர் செந்தாமரை கண்ணன் கூறியதாவது:

500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறி வித்தது துணிச்சலான முடிவுதான். 200% அபராதம் போடுவார்கள் என்று வருவாய்த்துறை செயலாளர் கூறுகிறார். ஆனால் நடைமுறையில் இது சாத்தியமில்லாதது. வழக்கு தொடரும் போது, பெரும்பாலும் வரு மான வரித்துறை தோல்வி அடைந்து விடும், காரணம் அவர்களால் அதனை நிரூபிக்க முடியாது. சொல்ல விரும்பு வது என்ன வென்றால், உங்களிடம் எவ்வளவு கோடி ரூபாய் இருந்தாலும், அதனை வங்கியில் செலுத்துங்கள். அதற்கு ஏற்ப 30% முன் கூட்டியே வரி செலுத்தி மொத்த2 தொகையும் வெள்ளை பணமாக மாற்றுங்கள்.

நிகழ்ச்சியை வழிநடத்திய தி இந்து பிஸினஸ் லைன் ஆசிரியர் ஸ்ரீனிவாசன் மற்றும் தி இந்து தமிழ் நாளிதழ் சிறப்பு நிருபர் குள.சண்முகசுந்தரம்.

நான் பணியில் சேர்ந்த (1980-ம் ஆண்டு) சமயத்தில் ரூ.2,500 கோடி மட்டுமே மொத்த வரி வசூல் செய் யப்பட்டது. ஆனால் அடுத்த வருடத்துக்கு ரூ.8.47 லட்சம் கோடி இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறோம். ஆனால் இதற்கேற்ப பணியாளர்கள் இல்லை. இந்த நடவடிக்கையால் கறுப்பு பணம் நீங்கிவிடுமா என்று கேட்கிறார்கள். வீட்டில் குப்பை இருக்கிறது. அதனால் வீட்டை சுத்தப்படுத்துகிறோம். சில நாளைக்கு நன்றாக இருக்கும். அதனை தொடர்ந்து சுத்தப்படுத்த வேண்டும். அதுபோல மேலும் பல நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

நாகல்சாமி, தமிழ்நாடு, புதுச்சேரி முன்னாள் அக்கவுண்டன்ட் ஜெனரல்

நம் நாட்டின் மக்கள்தொகையில் 50 சதவீதம் பேர்தான் வங்கிச்சேவை பற்றி அறிந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு மின்னணு பணபரிவர்த்தனை பற்றி தெரியாது. காலங்காலமாக ரொக்கமாக பணபரிவர்த்தனை செய்துவந்தவர்களை திடீரென மின்னணு பணபரிவர்த்தனைக்கு எப்படி மாற்ற முடியும்? இது எளிதான விஷயம் அல்ல. நீண்டகாலமாக பின்பற்றப்பட்டு வரும் ரொக்க பயன்பாடு பழக்கத்தில் இருந்து மின்னணு பணபரிவர்த்தனைக்கு மாறுவதற்கு நீண்ட காலம் ஆகும். புதிதாக 2,100 கோடி நோட்டுகளை அச்சிட வேண்டியுள்ளது. நம்மால் மாதத்துக்கு 300 கோடிதான் பணம் அச்சடிக்க முடியும். எனவே, 2100 கோடி பணத்தை அச்சிட வேண்டுமானால் 7 மாதங்கள் ஆகும். எனவே, அதுவரையில் அனைவரும் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும் போல்தான் தெரிகிறது. ஒரு ஜனநாயக நாட்டில் நமது வங்கிக்கணக்கில் இருந்து நமது தேவைக்கு ஏற்ப ரொக்க பணத்தை எடுக்க முடியாத நிலைமைதான் உள்ளது.

சுரேஷ் கிருஷ்ணன், நிர்வாக இயக்குநர் - இஷா ஹோம்ஸ்

பணமதிப்பு நீக்கம் காரணமாக வீடுகளின் விலை குறையும் என்பது பொதுவான எதிர்பார்ப்பு. ஆனால் சென்னையை பொறுத்தவரை அதற்கு வாய்ப்பு குறைவு. தவிர முறைப்படுத்தப்பட்ட நிறுவனங்கள் இதனால் பெரிய அளவில் பாதிப்படையாது.

சென்னையில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட வீடுகள் 1.5 கோடிக்கு கீழ் விற்கப்படுபவை ஆகும். 10 சதவீத வீடுகள்தான் இந்த தொகைக்கு மேல் இருக்கும். அதனால் அதைப்பற்றி விவாதிக்க ஒன்றும் இல்லை. இந்த 90 சதவீத வீடுகள் நடுத்தர மக்கள் வாங்குபவை. அவர்களால் எவ்வளவு முடியுமோ அந்தளவுக்கு வீட்டுக்கடன் வாங்கிதான் வீடு வாங்குகிறார்கள் என்பதால், இந்த சந்தையில் பெரிய பாதிப்பு இருக்காது. மாறாக வீடு வாங்கும் போக்கு உயரலாம். பண மதிப்பு நீக்கம் காரணமாக வங்கிகளில் அதிக சேமிப்பு வந்துக்கொண்டிருக்கிறது. அதனால் டெபாசிட்டுக்கான வட்டி குறைக்கப்படுகின்றன. வீட்டுக்கடனுக்கான வட்டியும் குறைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் வீடு வாங்குபவர்களின் எண்ணிக்கை உயரலாம்.

ரூபி ஆர் மனோகரன், நிறுவனர் ரூபி பில்டர்ஸ்

மத்திய அரசு எதையோ செய்ய நினைத்தது. ஆனால் நடந்தது வேறு. முதலை பிடிக்க வலை விரித்து சிறுமீன்கள் சிக்கிக்கொண்டன. சென்னை போன்ற நகரங்களில் இருக்கும் பில்டர்களுக்கு பிரச்சினை இல்லாமல் இருக்கலாம். ஆனால் சிறு நகரங்களில் இருக்கும் பில்டர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். விவசாயத்துக்கு பிறகு அதிகப்படியான தொழிலாளர்கள் இருப்பது கட்டுமானத்துறைதான். ஆனால் அவர்களில் பலர் வேலையில்லாமல் இருக்கிறார்கள் சனிக்கிழமை கூலி கொடுத்தால்தான் அவர்களால் அடுத்த வாரத்தை ஓட்ட முடியும். ஒவ்வொரு பில்டருக்கும் வாரம் சில லட்சம் ரூபாய் இருந்தால்தான் தொழிலாளிகளுக்கு கூலி கொடுக்க முடியும். பணம் எடுப்பதற்கு அரசு வைத்திருக்கும் வரம்பு மிகவும் குறைவானது. இதனை வைத்து எப்படி கூலி கொடுக்க முடியும்? மாற்று வழிகள் குறித்து உடனடியாக யோசிக்க வேண்டும்.

சங்கர், சங்கர் ஐஏஎஸ் அகாதமி

பண மதிப்பு நீக்கப்பட்டிருப் பதால் குறுகிய காலத்தில் பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. கல்வியை பொறுத்தவரை, கிராமப் புறங்களில் வேலை வாய்ப்புகள் குறையும். அதனால் பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்வது குறையும். அதேபோல பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை குறையும். மதிப்பு நீக்கம், வேலை வாய்ப்பு குறைவு ஆகிய காரணங்களால் மாணவர்களிடையே பயம் உருவாகும். அதனால் போட்டித்தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை உயரும்.

ராஜசேகரன், துணைத்தலைவர் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ்

தற்போதைய சூழலால் மக்கள் நம்பிக்கை இழந்திருக்கிறார்கள். இதேபோன்ற ஒரு சூழல் மீண்டும் வரக்கூடும் என்ற அச்சம் அதிகமாக இருப்பதால், கையில் பணத்தை வைத்திருக்கிறார்கள். முன்பெல்லாம் ஒரு நாளைக்கு 75,000 நபர்கள் கடைக்கு வருவார்கள், சராசரியாக ஒருவர் 1,500 ரூபாய்க்கு பொருட்கள் வாங்குவார். இப்போது மக்களிடையே பணம் இல்லாததால் ரங்கநாதன் தெரு காலியாக இருக்கிறது. ஒரு நாளைக்கு கடைக்கு வருபவர்களின் எண்ணிக்கை 5,000க்கு கீழ் வந்துவிட்டது. அப்படியே மக்கள் வந்தாலும், பெரிய விற்பனை இல்லை. தற்போது 2,000 ரூபாய் மட்டுமே புழக்கத்தில் இருப்பதால், அதனை சில்லரை மாற்றுவதற்காக கடைக்கு வருகின்றனர்.

பணமில்லா பரிவர்த்தனை குறித்த அச்சத்தை மக்களிடையே போக்க வேண்டும். அதற்கு தேவையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

ஜெயந்திலால் சலானி, தலைவர் சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கம்

நவம்பர் 8-ம் தேதி இரவு கடையை மூடுவதற்கு தயாரானோம். ஆனாலும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சிறிது அதிகமானதுபோல இருந்தது. சிறிது நேரத்தில் பெண்கள் கூட்டம் அதிகமானதை தொடர்ந்து விசாரித்தபோதுதான் எங்களுக்கு பண மதிப்பு நீக்கம் குறித்த விஷயம் தெரிந்தது. இதை எதற்காக சொல்கிறேன் என்றால் தங்கம் என்பது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கரன்ஸி. பணத்துக்கு மாற்றாக தங்கத்தை மக்கள் கருதுகின்றனர். அதனால் அவர்களுக்கு தங்கத்தை மாற்றிக்கொடுத்தோம். ஆனால் அடுத்த சில நாட்களில் பொற்கொல்லர்களுக்கு கொடுக்க எங்களிடம் பணம் இல்லை. இவர்கள் பெரும்பாலும் மேற்கு வங்காளத்தில் இருந்து வருவதால் அவர்களுக்கு வங்கி கணக்கு இல்லை. அதனால் அவர்கள் மேற்கு வங்கத்துக்கே சென்றுவிட்டனர். விரைவில் இந்த நிலை மாற வேண்டும்.

கே.சுந்தரேசன், ரிசர்வ் வங்கியின் முன்னாள் அதிகாரி

பெரும்பாலானவர்களுக்கு ஏன் 2,000 ரூபாய் நோட்டு என்ற சந்தேகம் வரலாம். 500 மற்றும் 1,000 புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டபிறகு, நீக்கப்பட்ட தொகைக்கு இணையான புதிய நோட்டுகளை அச்சடிப்பதற்கு கால தாமதம் ஏற்படலாம். அதனால் அதிக தொகைக்கு நோட்டுகளை விடும்போது பதற்றம் குறையும். அதற்காக 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கிறார்கள் என்பது என் கணிப்பு. அதேபோல தற்போதைய பணப்புழக்க சிக்கல் லாஜிஸ்டிக்ஸ் காரணமாக நடக்கிறது. ரிசர்வ் வங்கிக்கு இந்தியா முழுவதும் இருக்கும் வாலட்கள் பழைய நோட்டுகளால் நிரம்பி வழிகின்றன. அவை செல்லாதவையாக இருந்தாலும், அவற்றை பத்திரப்படுத்த வேண்டியது ரிசர்வ் வங்கியின் பொறுப்பு. ரிசர்வ் வங்கியிடம் புதிய நோட்டுகள் இருந்தாலும் லாஜிஸ்டிக்ஸ் பிரச்சினையால் முழுமையான புழக்கத்துக்கு வர இன்னும் 5 வாரங்கள் வரை ஆகலாம். ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தினமும் பதில் அளிக்கிறது. ரிசர்வ் வங்கியின் இணையதளத்தை மக்கள் படிக்க வேண்டும்.

வீ.ரவீந்திரன், சேலம் பட்டய கணக்காளர் சங்க துணைத்தலைவர்

இரு முக்கியமான விஷயங்களை பொதுமக்கள் கவனிக்க வேண்டும். திருமணத்துக்கு 2.5 லட்ச ரூபாய் பணம் எடுக்கலாம் என்றாலும், இந்த அறிவிப்பு வருவதற்கு முந்தைய நாள் (நவம்பர் 8) உங்கள் கணக்கில் பணம் இருந்தால் மட்டுமே எடுக்க முடியும். தற்போது முதலீடு செய்யும் தொகையை எடுக்க முடியாது. அடுத்த முக்கியமான பிரச்சினை ஜன்தன் வங்கி கணக்கில் 2.5 லட்ச ரூபாயை டெபாசிட் செய்வதாக தகவல்கள் வருகிறது. ஜன்தன் கணக்கில் 50,000 ரூபாய்க்கு மேல் செலுத்தும் போது, அந்த வங்கி கணக்கின் மூலமாக கிடைக்கும் சலுகைகள் ரத்தாகும் வாய்ப்பு இருக்கிறது. மானியங்கள் மற்றும் குறைந்த வட்டியில் கடன் ஆகியவை கிடைக்காமல் போகலாம். தவிர வருமான வரித்துறையிடம் இருந்து உங்களுக்கு நோட்டீஸ் வர வாய்ப்பு இருக்கிறது. அதனால் ஜன் தன் கணக்கு வைத்திருப்பவர்கள், அதனை தவறாக பயன்படுத்த வேண்டாம்.

கே.அழகுராமன், சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்

இந்த நடவடிக்கை அமலுக்கு வந்த பிறகு பணமற்ற பரிவர்த்தனை குறித்து அனைவரும் பேசுகிறோம். ஆனால் நீதிமன்றங்களில் இப்போதைக்கு சாத்தியமில்லை. லட்ச ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்றால் கூட ரொக்கமாகத்தான் கட்ட வேண்டும். பண மதிப்பு நீக்க நடவடிக்கை சரியா தவறா என்பதை இப்போதே முடிவு செய்வது சிரமம்.

எம்.ராஜ்குமார், கல்விக்கடன் விழிப்புணர்வு இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர்

அதிகளவு டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் நடக்கும் ஸ்வீடன் போன்ற நாடுகள் கூட முற்றிலும் ரொக்கமற்ற நாடாக மாறவில்லை. ஆனால் 130 கோடி மக்கள் தொகையில் ரொக்கமற்ற நாடாக மாறவேண்டும் என்பது எப்படி சாத்தியம் என தெரியவில்லை.

இந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற முடிவெடுத்த பிறகு, முன்னேற்பாடுகள் செய்திருக்க வேண்டாமா? சிறிய தொகையை அதிகமாக புழக்கத்தில் வைத்திருக்கலாம். தற்போது ஏடிஎம்களுக்கு ஏற்ற வடிவத்தில் 2,000 ரூபாயை கொண்டு வந்திருக்கலாம். இது போல பல முன்னேற்பாடுகளை செய்திருக்க முடியும். ஆனால் குறிப்பிட்ட சில பிரிவினர் மட்டுமே இந்த முடிவினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x